மினாசார கட்டணம் நிலுவையில் உள்ளதால் மின்துண்டிப்பு செய்யப்பட்டதை அடுத்து வவுனியா பழைய பேருந்து நிலையம் கடந்த சில தினங்களாக இருளில் மூழ்கி வருகின்றது.
இதனால் பேருந்து நிலையத்தை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை இதனால் மின்துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மின்மானியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்மாற்றியும் சேதமடைந்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் நகரசபையினால் பொருத்தப்பட்டுள்ள பிரகாசமான மின் குமிழ்கள் சில தினங்கள் இரவில் ஒளிர்வதில்லை அப்பகுதி எங்கும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது .
தற்போது காணப்படும் மழையுடனான காலநிலையினால் பி.பகல் வேளையில் முன்னதாகவே இருள் சூழ்ந்து கொள்கின்றது. எனவே இரவு வேளையில் வர்த்தக நிலையங்களைத் திறந்து வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையை உடனடியாக சீரமைத்துத்தருமாறு பழைய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தகர்கள் கோரியுள்ளனர்.
இவ்விடம் குறித்து நகரசபையினருடன் தொடர்பு கொண்டபோது மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை உடனடியாக செயற்படுத்த முடியவில்லை. அத்துடன் மின்சாரசபைக்கு செலுத்தவேண்டிய நிலவைப் பணமும் செலுத்தப்படவில்லை இதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை நகரசபையினால் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வர்த்தகர் சங்கத்தினருடன் தொடர்பு கொண்டபோது, வர்த்தகர்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் நகரசபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் இணைந்து இதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா